Monday, October 31, 2011

உள்ளாட்சித் தேர்தல் - 2011 -முடிவுகள் - திருவாரூர் நகராட்சி நிலவரம்

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில், திருவாரூர் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அ.இ.அ.தி.மு.க.-வின் வேட்பாளராகப் போட்டியிட்ட வழக்கறிஞர்திரு.வி.ரவிச்சந்திரன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.-வின் வேட்பாளரும், தி.மு.கழகத்தின் நகரச் செயலாளருமான திரு.இரா.சங்கர் அவர்களை விட 1098 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நகரமன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

1. வி.ரவிச்சந்திரன் (அ.இ.அ.தி.மு.க.) - 11858 Elected

2. இரா.சங்கர் (தி.மு.க.) - 10760 Not Elected

3. பாலாஜி(எ)எம்.எத்திராஜ் ( தே.மு.தி.க.) - 1846 Deposit Lost

4. பி.ஜி.கருத்திருமன் ( காங்கிரஸ்) - 954 Deposit Lost

5. ரயில்.டி.பாஸ்கர் ( ம.தி.மு.க.) - 918 Deposit Lost

6. என். அக்பர் அலி ( பா.ம.க.) - 586 Deposit Lost

7. தே. தேவக்குமார் ( சுயேட்சை) - 269 Deposit Lost

8. ஆர்.பிங்களன் ( பா.ஜ.க.) - 191 Deposit Lost

மொத்தமுள்ள 30 வார்டுகளின் நிலவரம் பின்வருமாறு: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை)

வார்டு எண் 1-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.டி.உமாமகேஸ்வரி (679)

வார்டு எண் 2-ல் தி.மு.க.-வின் எம்.லெஷ்மி பிரியா (661)

வார்டு எண் 3-ல் தி.மு.க.-வின் டி.செந்தில் (421)

வார்டு எண் 4-ல் சுயேட்சை வேட்பாளர் ஜி.வரதராஜன் (537)

வார்டு எண் 5-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் கே.மலர்விழி (534)

வார்டு எண் 6-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.பிரேமா (598)

வார்டு எண் 7-ல் மனிதநேய மக்கள் கட்சி-யின் ஐ.கலிபுல்லா (314) - *சுயேட்சை சின்னம்

வார்டு எண் 8-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.ஜாஹிர் ஹுசேன் (184)

வார்டு எண் 9-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் வி.பாஸ்கர் (296)

வார்டு எண் 10-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் மாஸ்டர்.எம்.தண்டாயுதபாணி (257)

வார்டு எண் 11-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.சித்ரா (360)

வார்டு எண் 12-ல் தி.மு.க.-வின் டி.ராஜகுமாரி (230)

வார்டு எண் 13-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் ஆர்.தெட்சிணாமூர்த்தி (583)

வார்டு எண் 14-ல் தி.மு.க.-வின் பி.ஜெயமணி(343)

வார்டு எண் 15-ல் தி.மு.க.-வின் என்.ராமு (480)

வார்டு எண் 16-ல் இ.தே.காங்கிரஸ்-ன் எம்.சம்பத் (322)

வார்டு எண் 17-ல் தி.மு.க.-வின் எம்.தேவி (475)

வார்டு எண் 18-ல் தி.மு.க.-வின் என். அசோகன் (501)

வார்டு எண் 19-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.சாந்தி (453)

வார்டு எண் 20-ல் தி.மு.க.-வின் ஜெ.காமராஜ் (416)

வார்டு எண் 21-ல் தி.மு.க.-வின் பி.ரெகுபதி (445)

வார்டு எண் 22-ல் தே.மு.தி.க.-வின் மோ.பிரசன்னா (340)

வார்டு எண் 23-ல் தி.மு.க.-வின் ஜெ.ஜமால் முகம்மது (519)

வார்டு எண் 24-ல் தி.மு.க.-வின் டி.கல்யாணி (282)

வார்டு எண் 25-ல் தி.மு.க.-வின் எஸ்.அன்வர் உசேன் (379)

வார்டு எண் 26-ல் அ.இ.அ.தி.மு.க.-வின் எஸ்.குருசாமி (439)

வார்டு எண் 27-ல் தி.மு.க.-வின் சு.தாஜுதீன் (441)

வார்டு எண் 28-ல் தி.மு.க.-வின் ஜெ.அய்யனார் (328)

வார்டு எண் 29-ல் தி.மு.க.-வின் வே.செந்தில் குமார் (463)

வார்டு எண் 30-ல் தி.மு.க.-வின் கே.முருகையன் (195)

ஆகியோர் நகரமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 30 வார்டுகளில்,

தி.மு.க. - 16 வார்டுகள்

அ.இ.அ.தி.மு.க. - 9 வார்டுகள்

இ.தே.காங்கிரஸ் - 2 வார்டுகள்

தே.மு.தி.க. - 1 வார்டு

மனிதநேய மக்கள் கட்சி (சுயேட்சை சின்னத்தில்) - 1 வார்டு

சுயேட்சை - 1 வார்டு

ஆகியவற்றை கைப்பற்றியுள்ளன.

தலைவர் பதவியை தி.மு.க. இழந்தாலும், பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தொடர்கிறது.

மீண்டும் ஒரு முறை, நகர மக்கள், திருவாரூர் தி.மு.க.-வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளனர்.


-ஆரூர். மு. அஜ்மல் கான்.

கொடிக்கால்பாளையம் த.மு.மு.க.-ம.ம.க.-வினரின் சமூகப் பணி

தொடர்ந்து பெய்துவரும் மழையால், கொடிக்கால்பாளையம், மேலத்தெரு மையவாடி முனையிலிருந்து, ஜும்’ஆ பள்ளிவாசல் வரையிலும் சாலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரால், போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து, அதில் மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படும் நிலையில், இன்று (27-10-2011, வியாழக்கிழமை) காலை நமது 7-வது வார்டு கவுன்சிலர் ஐ. கலிபுல்லா மற்றும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சகோதரர்கள், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் மேற்பார்வையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை வடியச் செய்யும் பணியில் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனர்.

களத்தில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள்

களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா அவர்கள்

களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா மற்றும் ம.ம.க.-வின் திருவாரூர் நகர செயலாளர் காதர் ஆகியோர்


படங்கள் மற்றும் செய்தி : ஆரூர். மு. அஜ்மல்கான்.

கொடிக்கால்பாளையத்தில் திருவாரூர் நகரமன்றத் தலைவரின் ஆய்வுப் பணி - 31 அக்டோபர் 2011

நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன்

திருவாரூர் நகராட்சியின் 7-வது மற்றும் 8-வது வார்டுகளை உள்ளடக்கிய கொடிக்கால்பாளையம் பகுதியில், மேலத்தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, நடுத்தெரு மற்றும் வடக்குத் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை, திருவாரூர் நகராட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரனுடன் (இடமிருந்து 2-வது) 7 மற்றும் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஐ. கலிபுல்லா (இடது) மற்றும் எம். ஜாகிர் உசேன் (வலது புறம்)

கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்றுவரும் சிமெண்ட் சாலைப் பணிகள், இப்பகுதியில் கால்வாய்கள், நகர்மன்றத் தலைவருடன் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மழைநீர் வடிகால்கள், சாக்கடை வசதி, சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவது ஆகியன பற்றிய ஆய்வுகள் நடைப்பெற்றது.

சிமெண்ட் சாலைப் போடும் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் கொடிக்கால்பாளையம் நடுத்தெருவின் சீரழிந்த நிலைமை. பாதிவேலை முடிந்த நிலையில் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு

இவருடன் 7-வார்டு உறுப்பினர் ஐ. முகம்மது கலிபுல்லா, 8-வது வார்டு உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மற்றும் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் உடன் சென்றனர்.

- ம.ம.க. நகரச் செயலாளர் காதர் அவர்களின் படங்கள் மற்றும் குறிப்புகளுடன்

ஆரூர். மு. அஜ்மல் கான்.

நகர்மன்றத் தலைவருடன் ம.ம.க. திருவாரூர் நகர செயலாளர் காதர் அவர்கள் நகர்மன்றத் தலைவருடன் த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள்